tamilnadu

img

சிறுபான்மை பள்ளிகளில் புதிய ஆசிரியர்களை நியமிக்க தடை

சென்னை, செப். 18-  அரசு உதவிபெறும் சிறுபான்மைப் பள்ளிகளில் புதிய ஆசிரியர் நியமனத்திற்கு  தடை விதித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், அனைத்து வகை சிறுபான்மை அரசு உதவி பெறும் பள்ளிகளும், பணிநிரவல் அடிப்படையில் மட்டுமே ஆசிரியர் பணி யிடங்களை நிரப்பிக்கொள்ள வேண்டும். மாவட்டத்திற்குள் இருக்கும் உபரி  ஆசிரியர்களை தேவைப்படும் பள்ளி களுக்கு பணியிட மாற்றம் செய்யவும்  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்க ளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கூடுத லாக ஆசிரியர்கள் தேவைப்படும் பட்சத்தில்  வேறு மாவட்டங்களில் உள்ள உபரி ஆசிரியர்களைக் கொண்டு பணிநிரவல் செய்யுமாறு பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு பணிநிரவல் செய்வ தால் கூடுதல் நிதி இழப்பு தவிர்க்கப்படுவது டன், பணிப் பாதுகாப்பும் உறுதிசெய்யப்ப டும் என அரசாணையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.